Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக பெய்த மழை…. கோவிலை சுற்றி தேங்கிய நீர்…. பக்தர்களின் கோரிக்கை….!!

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர வடிகால் வசதி அமைக்ககோரி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் நான்கு பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் வளாகம் முழுவதும் கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது. இங்கு தினசரி வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலை தொல்லியல் துறை சார்பாக பராமரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் இந்த கோவிலை சுற்றியுள்ள அகழியில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இவ்வாறு தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத மோட்டார் வைத்து அங்கு தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் எப்போது மழை பெய்தாலும் ஐராவதீஸ்வரர் கோவிலில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருக்கின்றது. இந்த கோவிலில் மழை நீரை வெளியேற்றுவதற்கு நிரந்தர வடிகால் வசதி இல்லாமல் இருக்கின்றது. இதில் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினாலும் உடனடியாக வடிவதில்லை. ஆகவே இந்த கோவிலுக்கு உடனடியாக நிரந்தர வடிகால் அமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |