ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு புகார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகின்றது.
மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முழுவதும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. இதனால் தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இதில் ஊழல் நடைபெற்றது என்று பிரதமரை திருடன் என்று ராகுல் காந்தி விமர்சித்தது தொடர்பான வழக்கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கின்றது.