Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து-இந்தியா போட்டி…. நாங்கள் தைரியத்துடன் விளையாட வில்லை…. விரக்தியில் கேப்டன் கோலி….!!

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தைரியத்துடன் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விரக்தியுடன்  தெரிவித்துள்ளார்.

டி 20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நேற்றைய தோல்விக்குப் பிறகு பேசிய விராட் கோலி, நியூசிலாந்திக்கு எதிராக களம் இறங்கும் போது பேட்டிங்கிலும், பவுலிங்கிலும், நாங்கள் போதிய தைரியத்துடன் விளையாடவில்லை என தெரிவித்தார்.

பேட்டிங்கில் அடித்து ஆட வேண்டும் என்ற மனநிலையுடன் ஷாட்களை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் குழப்பத்துடன் இருந்ததால் விக்கெட்களை வரிசையாக பறி கொடுத்தோம் எனக் கூறிய அவர் இந்திய அணியினர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதால் வருகின்ற போட்டிகளை பாசிட்டிவ் மனநிலையில் எதிர்கொண்டு  போட்டிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |