Categories
மாநில செய்திகள்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு…. பிங்க் நிறத்தில் ஜொலித்த கட்டடம்….!!

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை பிங்க் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை பற்றிய தகவல் மையத்தை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் சேகர்பாபு திமுக எம்பி தயாநிதி மாறன் போன்றோர் ரிப்பன் மாளிகையில் ஆரம்பித்து வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன் இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் 13 நிமிடத்திற்கு ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளார். எனவே நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில் தான் அதிநவீன கருவிகள் மூலம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |