Categories
உலக செய்திகள்

குறையத் தொடங்கிய கொரோனா…. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்…. பிரதமரின் அதிரடி அறிவிப்பு….!!

ஆஸ்திரேலியாவில் எவரெல்லாம் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியின் முழு அளவையும் பெற்றுக் கொண்டார்களோ அவர்கள் தாராளமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்று அந்நாட்டின் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது கொரோனா குறையத் தொடங்கிய நாடுகளில் அதற்கு எதிராக போடப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பாக போடப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார்.

அதன்படி ஆஸ்திரேலியாவில் எவரெல்லாம் கொரோனாக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியின் முழு அளவையும் செலுத்தி கொண்டார்களோ அவர்கள் தாராளமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்று ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் போது கட்டாயமாக 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |