Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மதிச்சயம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர். அப்போது சடையனேந்தல் விலக்கு அருகே உள்ள திருப்பத்தில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தடைந்துள்ளது.

இந்த கோர விபத்தில் வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து காரில் இருந்த 5 பேர் பலத்தகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த 5 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அபிராமம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |