Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் கொடுத்த எச்சரிக்கை… மக்களே உஷார்…. இதை யாரும் நம்ப வேண்டாம்…!!!!

நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மோசடி செய்பவர்கள் நிர்வாகிகளாக பேசி பயனர்களின் வங்கி கணக்குகளை அணுக முயற்சிக்கின்றனர். சமீபத்தில் ஒரு சைபர் கிரிமினல் ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகியாக பேசி KYC படிவத்தை புதுப்பிக்கும் சாக்கில் வாடிக்கையாளரை அழைத்ததாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

அதனை நம்பி வாடிக்கையாளர் தனது வங்கி விபரங்களை தவறுதலாக கொடுத்தபோது மோசடி அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றியது. எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். வாடிக்கையாளர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் அல்லது செய்திகளை பெறலாம். அதன்பிறகு வங்கி கணக்கை தடை நீக்க அல்லது புதுப்பிக்க வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது ஓடிபி கேட்கப்படலாம்.

அதன்பிறகு விவரங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். எனவே வாடிக்கையாளர்கள் கவனமாக இருங்கள். உங்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஓடிபி போன்றவற்றை யாருக்கும் பகிர வேண்டாம். போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பகிர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |