இந்திய அணியில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அடுத்த போட்டியில் பந்து வீச முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக இஷான் கிஷனை அணியில் சேர்க்க வேண்டும். நான் நிச்சயமாக பாண்டியாவிற்க்கு முன்பாக அவரை அணியில் சேர்க்க பரிசீலிப்பேன் என்று அவர் கூறினார். புவனேஷ் குமாருக்கு பதிலாக ஷர்டுல் தாகூரை சேர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.