கேரளாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி அருகே அமைந்துள்ள பள்ளிப்படி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மேலும் வெள்ளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே நிவாரண முகாம்களுக்கு சென்றதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்டு நிவாரண பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையம், ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை காரணமாக ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.