Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – இரு சக்கர வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் முருகனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |