Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது…. தேசத்துரோக வழக்கு… முதல்வர் எச்சரிக்கை….!!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பு இன்றி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில்  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். பாகிஸ்தானின் வெற்றியை பலரும் கொண்டாடிவரும் சூழலில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களில் சிலர் இந்தியாவுக்என்று கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதாக கூறப்படுகிறது.இதையடுத்து 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான டி 20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது தேசத்துரோக வழக்கு பாயும் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |