Categories
விளையாட்டு

கேல் ரத்னா விருது : நீரஜ் சோப்ரா உட்பட 11 வீரர்களின் பெயர்கள் பரிந்துரை….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட மொத்தம் 11 பேர் மத்திய அரசின் உயரிய விருதான கேல் ரத்னா பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சாதனை படைக்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது , அர்ஜுனா விருது ,துரோணாசாரியா விருது மற்றும் தயான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விளையாட்டு விருதுகளுக்கு தகுதிவாய்ந்த வீரர்,வீராங்கனைகளை அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றது.

அதன்படி சமீபத்தில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற ரவி தாஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஹாக்கி வீரர் ஸ் ரீஜேஷ், பாரா ஒலிம்பிக் தடகளப் பிரிவில் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை அவனி லெகாரா உட்பட  5 பேர் என மொத்தம் 11 பேர்  இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |