Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்… உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…!!!!

டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை  சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில் திருச்சுழி தாலுகா சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பகுதியில் தொடக்கப் பள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றது. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, கிராம வங்கிகள் ,கூட்டுறவு வங்கி போன்றவை இலுப்பையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதனால் சேதுபுரம் சாலையை கடந்து மக்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

இங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மிக சிரமமாக இருக்கும். இதனால் இந்த கடையை திறக்கக்கூடாது என்று கூறி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிமுறைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கை பொறுத்தவரை பெரும்பாலான உள்ளூர்வாசிகள் டாஸ்மாக் கடையை திறப்பதை விரும்பவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாகவோ அல்லது தனது பிரதிநிதிகள் மூலமாகவோ சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று தூர கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா? என்பதை கவனத்தில் கொண்டு நான்கு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |