Categories
தேசிய செய்திகள்

‘அதிக அளவு தண்ணீரை எடுத்துக்கோங்க’…. மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்…!!!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி மு.க ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. விரைவில் இதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 2109 கன அடியாகவும், தண்ணீர் திறப்பு 1750 கன அடியாகவும் உள்ளது. மழை தீவிரம் அடையும் பட்சத்தில் அணையின் மொத்த நீர் மட்டத்தை எட்டலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனால் முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீரை எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அணையை திறக்கும் முன்பு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அணையின் ஷட்டர்கள் திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கேரள அரசிடம் தெரிவிக்க வேண்டும்” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |