ஓய்வு பெற்ற ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மோட்டூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய ஊழியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து வெளியே சென்ற குப்புசாமி திரும்பி வரவில்லை. இதனை அடுத்து மார்க்கண்டேயன் என்பவரின் விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றில் குப்புசாமி சடலமாக கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் குப்புசாமி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.