கணவனை கிரிக்கெட் பேட்டால் தாக்கி கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராஜா ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜாராம் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 21 – ஆம் தேதி அன்று ராஜாராம் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி கிரிக்கெட் பேட்டால் ராஜாராமின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜாராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேவதியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.