Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் செப் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்த தமன்னா… வெளியான பரபரப்பான தகவல்…!!!

நடிகை தமன்னா தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தனர். இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சில வாரங்களுக்குப் பிறகு ரேட்டிங் இல்லை என நடிகை தமன்னாவை மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கிவிட்டனர். இந்நிலையில் தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது நடிகை தமன்னா வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

MasterChef Telugu: Tamannaah dishes out a treat - Divya Bharat ??

இதுகுறித்து தமன்னாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சம்பளபாக்கி இருப்பதாலும், தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்முறையற்ற ஒழுக்கம் காரணமாகவும் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் அளவிற்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார். ஒரே இரவிலேயே அவருடனான தொடர்புகளை துண்டித்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |