இருசக்கர வாகனம் கட்டிப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பள்ளிபட்டு அகதிகள் முகாம் பகுதியில் நண்பர்களான டெலக்சன் மற்றும் சூர்யா ஆகியோர் தங்களது குடும்பதிரருடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் உள்ள நண்பர் வீட்டிற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளப்பட்டி நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் டெலக்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் டெலக்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவருடன் சென்ற சூர்யா என்பவர் படுகாயமடைந்த நிலையில் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.