தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் தருமபுரி, தேனி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தகவல் தெரிவித்துள்ளார். கூர்நோக்கு இல்லத்தில் பெண்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.