Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்… வாலிபரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணத்தில் விருப்பமில்லாததால் கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள போத்தனூர் மேற்கு வண்ணாந்துறையில் ரமேஷ் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு குமரேசன் மறுத்ததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த குமரேஷன் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மயங்கி கிடந்த குமரேஷனை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி குமரேசன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |