கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் புதிதாக நடிக்க இருக்கும் தெலுங்கு படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இவர் 2.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாகவும், தற்போது தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இனிமேல் இவர் நடிக்கும் படங்களுக்கு 3 கோடி அல்லது அதற்கு மேல் தான் சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது.