தலிபான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பணம் மற்றும் நிலம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
தற்போது தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வருகின்றனர். முந்தைய ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் ஒரு ஆயுதமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். மேலும் தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்க படையினர் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு படையினரை குறிவைத்து தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தற்கொலை படை தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆனால் தற்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலிபான்களின் ஆட்சிக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்கப் படையினர் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கு எதிரான தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பணம் மற்றும் நிலம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
அதேசமயம் தலிபான்கள் அரசின் உள்துறை மந்திரி சிராஜிதுன் ஹக்னி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களை தியாகிகள் என்று கூறியுள்ளார். மேலும் நேற்று காபூலில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி சிராஜிதுன் ஹக்னி தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம் மற்றும் பணத்தை வழங்கியுள்ளார்.