Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவு பணியில் ஈடுபட்ட பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பதியினர்….!!

வயலில் நடவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்கொண்டார் இருப்பு கிராமத்தில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாய கூலிதொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரான கவுசல்யா என்பவர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் அருகில் இருக்கும் வயலில் நடவு பணிக்கு சென்றுள்ளார்.

அப்போது நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராவிதமாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி சாரதாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த வருவாய் துறையினர், காவல்துறையினர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் சாரதாம்பாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |