Categories
தேசிய செய்திகள்

குடிக்க பணம் தரவில்லை என்பதற்காக… மகன் செய்த கொடூர காரியம்… துடிதுடித்து உயிரிழந்த தாய்…!!!

குடிப்பதற்கு பணம் தராத காரணத்தினால் தாயை மகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த விமல் டக்கோபந்த் குல்தே என்பவரின் மகன் சச்சின் குல்தே.  இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவரது தாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தாயை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரியை தொடர்பு கொண்டு தாய் இறந்து விட்டதாகவும், வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். வீட்டுக்கு வந்த அவரிடம் தாய் இறந்தது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் நாமே இறுதி சடங்குகளை செய்து விடலாம் என்று கூற, நான் தனது தாயை பார்க்க வேண்டும் என்று சகோதரி கூறியுள்ளார்.

பிறகு சகோதரி அறைக்குச் சென்ற நேரத்தில் சச்சின் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். வீட்டுக்குள் சென்ற சகோதரி அறையினுள் ரத்தவெள்ளத்தில் கிடந்த தாயை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சச்சினை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Categories

Tech |