ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்ணை ஆர்பிஎஃப் வீரர் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை மாநிலம் கல்யான் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஏறியுள்ளார். ஏறிய சிறிது நேரம் கழித்து தான். தான் ரயில் மாறி ஏறி உள்ளதை உணர்ந்துள்ளார். பின்னர் ரயில் மெதுவாக நகர ஆரம்பிக்கும் பொழுது ரயிலிலிருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இந்நிலையில் அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்பு வீரர் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை காப்பாற்றினார்.
Railway Protection Force (RPF) staff Shri S R Khandekar saved the life of a pregnant woman who had slipped while attempting to de-board a moving train at Kalyan railway station today.
Railway appeals to passengers not to board or de-board a running train.@RailMinIndia pic.twitter.com/68imlutPaY
— Shivaji M Sutar (@ShivajiIRTS) October 18, 2021
இதனை மும்பை மத்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த பலரும் அந்த வீரருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்