பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் கொண்டு வருவதற்காக ஏற்கனவே ஜாமீன் மனு அளித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மீண்டும் கொடுக்கப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஏற்கனவே சிறையில் இருந்து சல்மான்கானை வெளியில் கொண்டு வந்த மூத்த வழக்கறிஞர் தான் வாதாடி வருகிறார் என்பதால் இம்முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் ஆரியன் கான் மற்றும் அவரது நண்பர்கள் எதிர்காலத்தில் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்ற காரணத்திற்காக அவர்களுக்கு சிறையில் கவுன்சிலிங் வழங்கப்பட்டது.
அப்போது ஆரியன் கான் “நான் சிறையில் இருந்து விடுபட்டதும் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பாடுபடுவேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இனி எப்போதும் நடந்து கொள்ள மாட்டேன்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே போதைப்பொருள் தடுப்பு பிரிவு பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட ரெய்டு மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய போதை பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.