Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஒரு நாளைக்கு 4௦ கிலோ மீட்டர்” நடையணமாக பிரசாரம்…. ராணுவ வீரரின் சிறப்பான செயல்…!!

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 197 நாடுகளை சார்ந்த கொடிகளுடன் நடைபயணம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசாமில் இருக்கும் ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு 197 நாடுகளை சார்ந்த கொடிகளுடன் நடைபயணமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு பாலமுருகன் புறப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பற்றியும், மனித வளங்களை காக்க அனைத்து நாடுகளில் இருக்கும் மக்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பின் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி 197 நாடுகளின் கொடியுடன்  ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்கு நடைபயணமாக புறப்பட்டருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அயோத்தியில் எனது இந்த விழிப்புணர்வு நடைபயணத்தை முடிப்பதாக உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணமாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |