சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது .சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தந்த தல தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன..
ஐபிஎல்லில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 9 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது சென்னை அணி.. இதில் 2010, 2011, 2018, 2021 ஆகிய 4 ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை அணி… ஏற்கனவே தோனி அனைத்து வகையான கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்து விட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் அடுத்த வருடம் ஆடுவாரா என்பது பெரிய சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.. அவர் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது..
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால் அவரின் ஆட்டத்தை ஐபிஎல் போட்டியின் மூலமே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.. ஆகவே கேப்டன் தோனி மீண்டும் சென்னை அணிக்கு ஆடுவாரா சென்னை அணிக்காகவே அவர் தொடர்வாரா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இறுதி போட்டி முடிந்த பிறகு எம்.எஸ்.தோனி கூறியதாவது,” எல்லாம் பிசிசிஐ -யின் கையில்தான் இருக்கிறது. அடுத்த ஐபிஎல் சீசனில் மேலும் 2 புதிய அணிகள் வருகிறது. இதனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சென்னை அணிக்காக விளையாடுவது முக்கியமல்ல. சென்னை அணியில் பெஸ்ட் எப்படி கிடைக்கும் என்பது தான் சரியான முடிவு. அதோடு அடுத்த 10 ஆண்டுகளுக்கான சென்னை அணி ஒரு கோர் டீமை உருவாக்க வேண்டும். தற்போது அது மட்டும்தான் நாங்கள் உற்றுநோக்கும் விஷயமாக உள்ளது என்றார். மேலும் நான் இன்னும் சென்னை அணியில்தான் இருக்கிறேன், எங்கும் போகவில்லை” என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை அணியில் முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம்.. அடுத்த ஆண்டு எத்தனை அணிகள் வேண்டுமானாலும் வரட்டும், அணியில் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யட்டும், முதல் ரீடெய்ன் கார்டை முதல் நபராக தோனிக்குதான் நாங்கள் பயன்படுத்தவுள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் கப்பலுக்கு தலைவன் தேவை.. அவர் மீண்டும் அடுத்த ஆண்டு சிஎஸ்கேவுக்கு விளையாடுவார் என அந்த அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் அடுத்த சீசனில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது..
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 அணிகள் வருகிறது. இதனால் பெரிய அளவில் ஏலம் நடைபெறும்.. ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.