வியாழன் கோளை சூழ்ந்து இருக்கின்ற விண்கற்களை ஆராய்ச்சி செய்ய நாசா நிறுவனம் லூசி என்ற விண்கலத்தை ஏவி இருக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் (Cape Canaveral Air Force Station) விமானப்படை தளத்திலிருந்து அட்லஸ் 5 ராக்கெட்டின் மூலமாக லூசி என்ற விண்கலம் ஏவப்பட்டு இருக்கிறது. இந்த ஆராய்ச்சியானது வியாழன் கோளை சூழ்ந்து இருக்கின்ற விண்கற்களை ஆராய்வதன் மூலம், 450 கோடி வருடங்களுக்கு முன்பு சூரிய குடும்பம் எப்படி தோன்றியது என்பதை கண்டறிய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து விண்ணில் 12 வருடங்கள் பயணிக்க உள்ள இந்த லூசி விண்கலத்தின் மூலமாக வியாழனைச் சூழ்ந்துள்ள 7 வகையான விண்கற்களை ஆராய்ச்சி செய்ய திட்டமிடபட்டுள்ளது. மேலும் 4 முதல் 225 கிலோமீட்டர் வரை விட்டளவு கொண்ட இந்த விண்கற்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது என்பதையும் கண்டறிய வாய்ப்பிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.