Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து கோவில்களும் திறப்பு…. சுவாமிக்கு நடந்த சிறப்பு வழிபாடு…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அனைத்து கோவில்களும் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதித்திருந்தது. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தடை விதித்திருந்தது. மற்ற நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமிகளை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் அனைத்து நாட்களிலும் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.

மேலும் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் வழக்கம்போல் திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்பாளை வழிபட்டு வந்தனர். இதனையடுத்து நெல்லையப்பர் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுவாமி சந்திரசேகர் வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு ராமையன்பட்டி சென்றார். அங்கு அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி சந்திரசேகரரம், புட்டாரத்தி அம்மனும் சப்பரங்களில் காட்சி கொடுத்தனர். இதேபோன்று நெல்லை டவுன் சரஸ்வதி கோவில்ம், சாலை குமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், கைலாசநாதர் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை வழக்கம் போல் நடைபெற்றது.

Categories

Tech |