Categories
அரசியல்

மீனவர்கள் விவகாரத்தில்…. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்…. எல்.முருகன் உறுதி…!!!

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன் அவர்களுக்கு நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள 66 மீனவ கிராம மக்களின் சார்பாக கடிதம் ஒன்று வந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

ஆகவே இவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பரிசீலித்த அவர், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இவரின் சார்பாக கடிதம் ஒன்றை எழுதினார். இதில் கைது செய்யப்பட்டுள்ள 23மீனவர்களையும், 2 படகுகளையும் உடனடியாக மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் 23 மீனவர்களை விரைவில் விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தில் தான் விரைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |