Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… வாலிபருக்கு தீவிர சிகிச்சை…!!

இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் சக்கரவர்த்தி என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் சென்னையில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரியா தனது உறவினரான அஜித் என்பவருடன் உப்பிலியாபுரத்திற்கு சென்றுவிட்டு மீட்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உப்பிலியாபுரம் மங்கப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரியா மற்றும் அஜித்தை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பிரியாவின் உறவினர்கள் அஜித் மற்றும் பிரியாவை மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற உப்பிலியாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |