டிரைவர் வீட்டில் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்ஜோதி அவரது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த செயின், கம்மல், வளையல், மோதிரம் உள்பட 6 1\2 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் வீடு திரும்பிய அருள்ஜோதி குடும்பத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அருள்ஜோதி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அருள்ஜோதி மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதனை வைத்து மதுக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.