Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விளையடிகொண்டிருந்த குழந்தை… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுகோட்டை மாவட்டம் அண்டக்குளத்தை அடுத்துள்ள புதுக்குடியான்பட்டியில் குமாரசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும் 2 1/2 வயதில் குணவதி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குணவதி வீட்டிற்கு பின்புறம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக குழந்தை விழுந்துள்ளது. இதனையடுத்து தொட்டிக்குள் விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொட்டிக்குள் மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக குழந்தையை மீட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்னவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலரித்து சென்ற உடையாளிபட்டி காவல்துறையினர் குழந்தையை மீட்டு உடற்கூராவிர்க்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |