Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழை தீவிரமாக கற்று வரும் ராஷி கண்ணா… தானே டப்பிங் பேச ஆசை…!!!

பிரபல நடிகை ராஷி கண்ணா தமிழ் பேச தீவிரமாக கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. இப்படங்களை தொடர்ந்து இவர் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இப்படத்தில் நடித்த ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி, குஷ்பூ ஆகிய இருவருக்கும் எனது நன்றி. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்திலும் நடித்து வந்தார். இதன் மூலம் அவர் கடின உழைப்பாளி என்பதை புரிந்து கொண்டேன்.

மேலும் நான் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம் மிகவும் வித்தியாசமானது. ஆகையால் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறேன். சொல்லப்போனால் 15 நாட்கள் படமாக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது என்னை ரோப்பிலெல்லாம் கட்டி பறக்க விட்டார்கள்.

அரண்மனை 3 படத்தை தொடர்ந்து மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இதற்காக நான் தமிழ்மொழியை தீவிரமாக கற்று வருகிறேன். அரண்மனை 3 படப்பிடிப்பின் தொடக்கத்தில் நான் ஓரளவுக்கு தமிழ் பேசினேன். தற்போது முடியும் நிலையில் தெளிவாக பேசுகிறேன்.ஆனால் இன்னும் முழுமையாக கற்றுக்கொண்டு அடுத்தடுத்து நான் நடிக்கும் தமிழ் படங்களில் நானே டப்பிங் பேச வேண்டும்” என்று ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |