Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற பெண்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான கல்பனா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த கோவிந்தராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்பனாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |