Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை… புதிய ஜெர்சியில் களமிறங்க போகும் இந்திய அணி!!

 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி  அறிவிக்கப்பட்டது.

அணி வீரர்கள் :

கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சஹர், அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, முகம்மது சமி, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..  காத்திருப்பு வீரர்களாக ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோர் இருக்கின்றனர்.. அணியின் ஆலோசகராக எம்எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளது கூடுதல் பலமாக இருக்கிறது.

இந்த நிலையில் டி20 உலகக் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது..

 

Categories

Tech |