கோவிலின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டி-லக்கம்பட்டி செல்லும் பகுதியில் சிவனடி அய்யன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து கோவில் கதவு திறந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக பாலமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.