விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தநகர் பகுதியில் இலியாஸ்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜாஸ்மின் பானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சாகித்கான் என்ற மகனும் சமிதா லைலா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இலியாஸ்கானுக்கு வேலை கிடைக்காததால் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இதனால் ஜாஸ்மின் பானு மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்த ஜாஸ்மின் பானு கடந்த 7-ஆம் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜாஸ்மின் பானுவை உடனடியாக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜாஸ்மின் பானு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.