கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை பதிவு செய்த தேசிய நிலநடுக்க மையம் ரிக்டர் அளவுகோலில் 3.6 சென்டிமீட்டர் உணரப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறியது.
இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியில் காலை 6 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.