மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு செல்வம் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.