Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மழைநீர் சேகரிப்பது அவசியம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… பேரூராட்சி சார்பில் பேரணி…!!

மழைநீரின் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தின் தேவை குறித்தும் அவைகளின் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பரமத்திவேலூர் பேரூராட்சியில் நடைபெற்ற பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ், துப்புரவு ஆய்வாளர் குருசாமி, சுய உதவிக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.  இந்த பேரணி சாலையின் முக்கிய சாலை வழியாக சென்று  பேருந்து நிலையம் அருகே முடிவடைந்துள்ளது. இதேபோல் பொத்தனூரில் நடந்த பேரணியில் பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கியுள்ளார். இளநிலை உதவியாளர் ஜெயசேகரன், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட நிலையில் இந்த பேரணி முக்கிய சாலை வழியாக சென்று கடைசியாக பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்துள்ளது.

Categories

Tech |