கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சி-கோவை சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ராஜகோபால் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.