Categories
மாநில செய்திகள்

நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா 3-வது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும், 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா நோயாளிகள் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதன் பலனாக தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 கொரோனா காலத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் 2 அல்லது 3 மாதங்கள் மட்டும் வேலை பார்த்து இருந்தாலும் அவர்கள் அனைவரையும் வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை தொடர்ந்து பணியாற்ற அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தையும் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறிஉள்ளார்.

Categories

Tech |