Categories
மாநில செய்திகள்

புதிதாக அமையும் காவல் ஆணையகரக எல்லைகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு…..!!!!

நிர்வாக வசதிக்காக சென்னை பெருநகர காவல் துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம் ஆவடியில் புதிய காவல்துறை ஆணையகரகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழக அரசு ஆவடி மாநகராட்சிகளுக்கு காவல் ஆணையர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஏடிஜிபி ரவி ஐபிஎஸ் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டிஜிபி சைலேந்திரபாபு புதிதாக அமையும் ஆவடி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இடம்பெறும் காவல் நிலையங்களை அறிவித்துள்ளார். அதில் சென்னை பெருநகர காவல் ஆணையரின் கீழ் 104 காவல் நிலையங்களும், ஆவடி காவல் ஆணையத்தின் கீழ் 25 காவல் நிலையங்களும், தாம்பரம் காவல் ஆணையகத்தின் கீழ் 20 காவல் நிலையங்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |