ரயிலில் அடிபட்டு காண்டிராக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மல் நாராயணா தெருவில் ரெனிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வேயில் பெயின்டிங் காண்டிராக்டராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ரெனிஸ் தனது நண்பரான வின்சன்ட் என்பவருடன் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், லட்சுமி மில் ரயில்வே மேம்பாலத்திற்கும் இடையே இருக்கும் தண்டவாள பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போதுதாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரெனிஸ் மீது மோதி விட்டது. இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ரெனிசின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.