Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைபட்டி பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணியில் இருந்தபோது மைக்கேல் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துவிட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கரை ஒதுங்கிய மைக்கேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |