Categories
சினிமா தமிழ் சினிமா

புது ரிஸ்க் எடுக்கும் அரவிந்த்சாமி…. இதில் வெற்றி பெறுவாரா….? வெளியான தகவல்….!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அரவிந்த்சாமி ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தார். அதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த இவர் தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வணங்காமுடி ,சதுரங்கவேட்டை 2, புலனாய்வு போன்ற படங்களில் நடித்து வரும் இவருக்கு புதிய எண்ணம் ஒன்று வந்துள்ளது. அதாவது மலையாளத்தில் கானே கானே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றது.

இதனால் அந்தப் படத்தை தமிழில் இயக்கலாம் என்ற முடிவை அரவிந்த்சாமி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இவர் அதில் நடிப்பதற்கும் முடிவு செய்துள்ளார். வெகுவிரைவில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனராக வெற்றி பெறுவாரா என்பதை படம் வெளியாகும் வரை பொறுமையாக இருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

Categories

Tech |