நடிகை ஆண்ட்ரியா அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வரும் ஆண்ட்ரியா தற்போது அரண்மனை 3, பிசாசு 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சுந்தர் .சி இயக்கியுள்ள அரண்மனை 3 விரைவில் வெளியாக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. பாபி ஆண்டனி இயக்கும் இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க இருக்கிறார். காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப், ஆஷாசரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.