ஆளும் கட்சி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கையில்தான் சாகும் வரை உண்ணாவிரதம் என்று ஜெயக்குமார் அறிவித்ததாக அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த கே.ஆர் பெரியகருப்பன், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆளும் கட்சி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் தலைமையிலான இந்த அரசு ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற முனைப்பு காட்டுகின்ற காரணத்தால், அப்படி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலை வந்து விடாது என்ற தைரியத்தில்தான் அவர் இந்த அரசின் மீது முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்துத் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறார். அதனை தொடர்ந்து வருகின்ற தகவலின் அடிப்படையில் அவர் அத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்படவில்லை. ஆகவே அவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலைமை வராது”என்று கூறினார்.